Thursday, April 21, 2011

ஜன்னலும் அடிவானத்துப்பறவையும்

















இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
இந்த கம்பியிட்ட ஜன்னலோடு
கண் பூத்துப்போக
வெளியே வெறித்துக்கொண்டும்
கனவு கண்டுகொண்டும்
காத்துக்கிடப்பது?
நேற்றிரவு இதே ஜன்னலின் அருகில்
உட்கார்ந்திருந்தபோது
தெருவில் பெண்ணழைப்பு ஊர்வலம்
வெகு அமர்க்களமாய் நடந்துபோனது.
அடுத்ததெருவீட்டுப்பையன்
இந்த ஜன்னலை திரும்பிப்பார்க்காமல்
சமீப நாட்களாய்போவதேயில்லை.
ஜன்னலின் அருகே
எப்போது வந்தமர்ந்தாலும்
ஏதாவதொரு பறவை
வெகு தூரத்தில் அடிவானத்துக்கருகில்
பறந்துகொண்டிருக்கும்.
இப்போதுமொரு பறவை
பறந்துகொண்டிருப்பது இங்கிருந்து
மங்கலாகத்தான் தெரிகிறது.

No comments:

Post a Comment