Saturday, October 23, 2010

மீட்சி காலம்



















நிர்பந்திக்கப்பட்ட
நெடுந்தூர வாழ்வில்
எதைக்கொண்டு மீட்பது
பழைய நிகழ்வுகளை?

வாகனங்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கிறது
எந்திர வாழ்வு.
சற்றைக்கொருதரம்
வடிவம் மாறும் மேகங்களை கவனித்து
மாதங்களாகிறது.
பூக்களை பெண்களின் தலைகளில்
பார்ப்பததோடு சரி.
கடைசியாக பறவைகளை பார்த்தது
எப்போதென்று நினைவேயில்லை.
மாழைபெய்யும் அதிசயநாட்களில் கூட
அன்றைய இழ்புகளைத்தான்
கணக்குப்போடுகிறது பாழாய்ப்போன
நகர வாழ்வு.

எதிர்ப்படும் எந்தஒரு முகமும்
அன்பாக இருப்பதாக தெரியவில்லை.
பெண்கள்கூட இறுக்கமாகத்தான்
இருக்கிறார்கள்.

பறந்துகெண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
எல்லோருக்கும் எல்லோரையும்
கடந்துபோகக்கூடிய அளவுக்கு
வேலைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
நால்ரோட்டில் சிக்னலுக்காக நிற்கும்
சற்றை நேரத்திற்குகூட
அவசரமாக மணிக்கட்டை பார்த்து பார்த்து
அலுத்துக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கும் எனக்குமான
மீட்சி காலம்தான்
என்றைக்கு... எந்தவிதத்தில்?...

Thursday, October 21, 2010

பெயர் குறித்து...


    எல்லாவற்றையும் பாரதியிலிருந்தே தொடங்கும் நான் இந்த வலைப்பதிவின் தலைப்புக்கும் அவனையே நாடினேன். எதற்கும், எப்போதும் என்னை ஏமாற்றாத பாரதி ஒரு நல்ல தலைப்பையே எனக்கு கொடுத்திருப்பதாக நம்புகிறேன்.

            கானப் பறவை... எந்த கட்டுப்பாடும் இல்லாத பறவைகள் தன் விருப்பப்படி சுற்றி கத்தித்திரியும், அல்லது பாடும். எதுவும் யாரும் பெருட்டல்ல அவைகளுக்கு.என்ன ராகம், என்ன அளவுகோள், எங்கு பாடவேண்டும், என்ன பாடவேண்டும் என எது பற்றியும் அக்கறையோ, கவலையோ கிடையாது. தேவையும் இல்லை. தெரிந்த ஒன்றே ஒன்று சமயம் கிடைக்கும்போது பாடுவது. இது கானப் பறவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
     அசோகமித்திரனின் எளிமையான அதேசமயத்தில் ஆழமான எழுத்தும், அனாவசியமாக வார்த்தைகளை பயன்படுத்தாத சுந்தர ராமசாமியின் எழுத்தும், நாஞ்சில் நாடனின் சமூகக் கரிசன எழுத்தும் தான் இலக்கியத்தின் பால் இன்னமும் நாட்டம் கொண்டிருக்கச் செய்கிறது என்னை. ஒரே ஒரு கதையோ, கட்டுரையோ அசோகமித்திரன் மாதிரி சுந்தர ராமசாமி மாதிரி எழுத முடிந்து விட்டாலே பெரும் விருப்பம் நிறைவேறிவிடும் போல தோன்றுகிறது...