Saturday, July 16, 2011

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?
















வருடாந்தோரும் மும்பை மக்களுக்கு தீபாவளி வருகிறதோ இல்லையோ கட்டாயம் குண்டு வெடிப்பு தவறாமல் வருகிறது. வழக்கம் போல பிரதமர், அமைச்சர்கள் வன்மையாக கண்டிக்கிறோம், தீவிர வாதத்தை இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டோம், மக்கள் அனைவரும் அமைதிகாக்கவேண்டும்
என்ற செத்துப்போன வார்த்தைகளையே திரும்பத்திரும்ப, ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியாக செய்ய கையாளாகாத அரசியல் வாதிகளால் இந்த உப்புசப்பில்லாத வார்த்தைகளைத்தவிற வேறென்னதான் செய்யமுடியும்?

ஊடகங்கள் அதற்கு மேல். ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பின் பிறகும் உடனடியாக ஒரு அட்டவணை போடுவார்கள். இந்த ஆண்டில், இந்த தேதியில்
இத்தனை உயிர்கள் பலி என்று அட்டவணையில் சேர்ப்பதற்காகவே குண்டு வெடிப்பை பார்ப்பார்கள். அட்டவணைதான் நீண்டுகொண்டே போகிறது.
எது எதற்கோ போராடும், அலைந்து திரியும் ஊடகங்கள் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகளின் சட்டையைப்பிடித்து கேள்வி கேட்க்க என்றுமே முனைந்ததில்லை. குண்டு வெடிப்பில் பலியான, காயம்பட்ட மனிதர்களின் ரத்தக்கறை காயும்முன் வேறு செய்திகளுக்கு தாவிவிடுவார்கள்.
குண்டுவெடிப்பின் சோகத்தினூடே சினிமாக்காரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உடனடியாக அவ்விஷயத்திற்குள் தாவிவிடவும் தயங்கமாட்டார்கள்.

மற்ற எல்லாவற்றையும் விடுங்கள். எனக்கு இந்த மக்களை நினைத்தால்தான் பெருங்கோபம் வருகிறது. குண்டு வெடித்த 12 மணி நேரத்திற்குள் மும்பை மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்கள் என்ற செய்தியைத்தான் மனம் நம்ப மறுக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறதென்றும் தெரியவில்லை. தங்களின் வாழ்க்கைக்கு, உயிர்களுக்கு என்றுமே உத்தரவாதமில்லாத ஒரு மாநிலத்தில் வாழ்கிறோம் என்ற கவலை, அச்சம், கோபம் என எதுவுமில்லாமல் ஒரு விலங்கு வாழ்க்கைபோல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஒவ்வொருமுறையும் கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் உருத்தெரியாமல்
சிதைந்து போவதை எப்படி ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. ரத்தமும் சதையும் நகர வீதிகளில் சிதரிக்கிடப்பதை பார்த்துவிட்டு அடுத்த 12 மணி நேரத்திற்குள் வழக்கமான வேலைகளில் மனிதர்கள் ஈடுபடுவதை எப்படி புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதர்களின் மனம் ஈரமற்று போய்விட்டதா? அல்லது நமக்கென்ன, நமக்கு நேராதவரை நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற அலட்சியமா?

ஆனால் ஒவ்வொருமுறையும் பலியானவர்களுக்கு கூட்டம் கூட்டமாக தவறாமல் அஞ்சலி செலுத்துகிறார்கள். மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க நிற்கிறார்கள். அதையே ஏன் அவர்கள் ஒரு பெரும்போராட்டமாக முன்னெடுத்து செல்லக்கூடாது? இரண்டு மூன்று நாட்களுக்கு நகரம் ஸ்தம்பிக்கும்படி ஏன் போராட்டங்களை நீட்டிக்ககூடாது? தெலுங்கானா தனிமாநிலம் கேட்டு ஆண்டுகணக்கில் போராட்டங்கள் நடைபெறவில்லையா?

ஊழல் என்ற ஒற்றை வார்த்தைக்கு அன்னா அசாரேயுடன் சேர்ந்துகொண்டு என்ன மாதிரியெல்லாம் போராடுகிறார்கள்? உயிர்களைவிட ஊழல்கள் பெரிதாகிவிட்டது நாட்டில்.

நாடும் நாட்டு மக்களும் நாசமாகப்போகட்டும்.












நன்றி தினமணி

Wednesday, July 13, 2011

மொழி


















இதைவிட அன்புததும்பும், கண்ணில்நீர் வரச்செய்யும் ஒரு கவிதையையோ
கதையையோ எழுதிவிடமுடியுமா எவராலும்?




















பயணம்?
















வண்டி மட்டுமா குடைசாய்ந்து கிடக்கிறது?