கிட்டத்தட்ட ...
பெரும்பாலும்
அதைப்பற்றி யாரிடமும் யாரும் சொல்வதில்லை.
அப்படியே சொன்னாலும்
"நேத்துகூட நீங்க கனவுல வந்தீங்க" என
பொதுவான விஷயமாகத்தான்
சொல்ல முடிகிறது.
நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்திலோ
பேசமுடிகிற சந்தர்ப்பத்திலோ
கனவில் என்ன விதமாக
எந்த நிகழ்வில் வந்தாரென
எப்போதும் எந்தகாலத்திலும் யாரும்
சொன்னதில்லை, சொல்லப்படப்போவதுமில்லை
என்பதைவிட சொல்லவே முடியாது
என்பதுதான் நிஜமாக இருக்கிறது.
நடைமுறையில், நிஜத்தில்
நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயங்களை,
உறவுகளோடு ஏற்படும் "உறவை"
என்னவென்று யாரிடம் எப்படி சொல்வது?
மறக்கமுடியாத துயர சம்பவங்கள் நேர்நதால்
கெட்ட கனவுமாதிரி நினைத்து
மறந்துவிடச்சொல்லுவார்கள்.
சில ஏற்கவியலாத கனவுகளைக்கூட
அப்படித்தான் செய்யவேண்டும் போல...
03.12.2006
No comments:
Post a Comment