Thursday, April 21, 2011

சிதைவு (3)





















நிறைய குழம்புகிறேன்
நினைவிழந்து போகிறேன்.
எதிரே வரும் வாகனங்களிடம்
வசவுகள் வாங்குகிறேன்
நண்பனை ஊருக்கு பஸ் ஏற்றிவிட்டு
அன்றிரவே அவன் இருக்கிறானா என
அவன் வீடு சென்று கேட்கிறேன்.
பாதிப்புணர்தலில் எழுந்து
இரண்டாம் காட்சி சினிமாவுக்குப்போகிறேன்,
முடியும்முன்பே எழுந்து
வீட்டுக்கு வருகிறேன்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதி
முகவரிமாற்றி அனுப்பிவிட்டு
இரவில் துணுக்குருகிறேன்.
சவரம் செய்த நேற்றிரவு
கன்னத்தை பிளேடால் ஆழ
கிழித்துக்கொண்டேன்.
நிறையநாட்கள்
நிலையின்றி தவிக்கும் பல்வேறு தருணங்கள்
நிறைய குழம்புகிறேன்
நினைவிழந்து போகிறேன்...

06.07.1995

No comments:

Post a Comment