Thursday, December 30, 2010

பொருள் வரின் பிரிவு





















பக்கத்துப் பகுதி
குடியிருக்கும் வீட்டில்
ஒலியும் ஒளியும்
ஓடிக்கொண்டிருந்த
இருளத்துவங்கிய நேரம்
வீட்டைப்பற்றின
நினைவு தொடர்ந்தது.
வழக்கம் போல
சாய்வு நாற்காலியில் அப்பாவும்,
எப்போதும் தரையிலேயே
அமரும் அம்மாவும்,
முற்றத்து தூணில்
சாய்ந்து அண்ணனும்,
தெருவிலிருந்து நான்கைந்து
பேராவது வந்து
கதவின் ஓரமாக நின்றுகொண்டும்,
முடியும் முன்பே தூங்கிவிடும்
எதிர்வீட்டுக்குழந்தையும் - ஆக
இன்னேரம் வீட்டில் பார்ப்பார்கள்
ஒலியும் ஒளியும்.
முடிந்தவுடன் சாப்பாடு மற்றும்
பின்னிரவு பேச்சுகள்.
தொடர்ச்சியாய் கிளைபிரிந்து
பின்னிரவுதாண்டியும் நீண்டு
கொண்டிருந்தது நினைவு.
வீடு, சுற்றம், ஊர், காதலி நண்பர்கள் என
விலகியிருக்கும்போதுதான்
புரிகிறது
அனைத்தின் அருமையும்.

28.06.1996

No comments:

Post a Comment