நெடுநேரம்
என்னோடு பேசிக்கொண்டிருந்தவரிடம்
வாய் திறக்காமல்
நான் பேசிய
வார்த்தைகள் மூன்று.
உம் கொட்டியது
ஒன்று.
தலையை இடம்வலமாக மற்றும்
மேலும் கீழுமாக அசைத்தது
இரண்டு.
இடையிடையே
புன்னகைத்தது
மூன்று.
குழந்தை வளர்ப்பில்
எனக்குமுன்னுள்ள சவாலே
என் பிள்ளைகளுக்கு
பேசக் கற்றுக்கொடுப்பதாகத்தான்
இருக்கும்போல...
இழவு வீடுகளில்
துக்க விசாரிப்பு கூட
மெல்லத் தோள்தொட்டு
கைபிடித்து தன்
உள்ளங்கையில்
வைத்துக்கொள்ளத்தெரியாமல்
ஆறுதல் வார்த்தையென்ற பெயரில்
பேசியே கொல்கிறார்கள்
மேலும்...
No comments:
Post a Comment