Tuesday, December 28, 2010

பூர்த்தி






















"சார் ஒரு நிமிஷம்" எனக்
கெஞ்சலாகவும், உரிமையாகவும்
வங்கிகளில், தபால் அலுவலகங்களில்
நூலகங்களில், கோவில்களில் என
பல்வேறு இடம் மற்றும் சந்தர்ப்பங்களில்
தொலைபேசி எண் எழுதவோ,
விண்ணப்பம் பூர்த்தி செய்யவோ
கடிதத்தின் முகவரி எழுதவோ,
அர்ச்சனை சீட்டில் பெயரெழுதவோ
ஏன் ஒரு முறை
கண்ணாடி தம்ளரில் ஊற்றின
மதுவைக் கலக்க
சுற்றிலும் தேடியவனுக்கு
எதுவும் கிடைக்காமல்
சட்டென என் சட்டைப்பையில்
கைவிட்டு எடுத்து கலக்கின
நணபன் வரை
எத்தனையோ நபர்களின்
தேவைகளை "பூர்த்தி" செய்திருக்கிறது
என் பேனா.

No comments:

Post a Comment