Thursday, December 30, 2010

பேசுதல் குறித்து...(4)















இருவருக்கும்
மனம் பாரமாயிருந்த அப்போதைக்கு
முன்னிரவு நேரமாக இருந்தது.
ஆசுவாசம் தேடிய நாம்
ரயில்வே ஸ்டேஷன் பக்கமாக நடந்தோம்.
பிளாட்பாரத்தில் ஆங்காங்கே
நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும்,
நடந்துகொண்டுமாக
சிதறிக்கிடக்கிறார்கள் மனிதர்கள்.
உட்கார இடம் தேடி நடக்கிறோம.
ஒரு சிகெரட் வாங்கி
உனக்கு பிடிக்காதபோதும்
பற்றவைத்துக்கொண்டேன்.
நாம் போவதற்கு முன்பிருந்தே
எரியாமலிருந்த அந்த மின்கம்ப விளக்கு
நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த
வெகு நேரத்திற்குப்பிறகே எரிய ஆரம்பித்தது.
ஆட்கள் அதிகமற்ற இடத்தில்
அமர்ந்திருந்தோம்.
மறுபடியும் மின்விளக்கு அணையாதா
என நீ எதிர்பார்த்தபடியே
சற்றைக்கெல்லாம் நின்றுவிட்டது அது.
ஒரு நிமிடம் சுற்றிப்பார்த்த நீ
சட்டென்று என் தோள் பக்கம் சாய்ந்து
உட்கார்ந்தாய்.
சற்றே ஆறுதலாய் இருந்திருக்கும் உனக்கு.
பார்வையும், பிரக்ஞையும்
எதில் நிலைத்திருந்தது
எனத்தெரியாத நிலையிலிருந்தேன் நான்.
என்றாலும் காற்றில்
உன் புடவைத்தலைப்பு
என் முகத்திலும், மார்பிலும்
மெத்தென்று பனி படர்வதைப்போல படர்ந்ததுதான்
மிகுந்த ஆறுதலாய்;-
நீ பேசிக்கொண்டிருந்தைதவிடவும்;
தோளில் சாய்ந்ததைவிடவும்
இருந்தது என்க்கு.

No comments:

Post a Comment