Tuesday, December 28, 2010

சாயல்














ஒருவர் மாதிரியே
உலகத்தில் ஏழுபேர்
இருப்பர்களாம்.
ஏழுபேர்களையும் தேடி
உலகைச்சுற்ற
அவசியமில்லாமல்
எங்கள் வீட்டுக்குள்ளேயே
நான், மனைவி, அப்பா,
அம்மா, எதிர்வீட்டு மாமா,
என் நண்பன், மனைவியின் தம்பி
என எல்லோரும்
ஒரே உயரத்துடன் இருந்தது,
ஒரே மாதிரி நின்றிருந்ததது,
ஒரே மாதிரி கைவைத்திருந்தது,
ஒரே மாதிரி உடுத்தியிருந்தது உள்பட
அனைவரும் அச்சு அசலாக
ஒரே மாதிரி இருந்தோம்
என் நான்கு வயது மகள்
வரைந்த ஓவியத்தில்.

No comments:

Post a Comment